Enrum Anbulla Nanban Dilip

Namma Raasa.. Oru kathai

Posted in funny by Dilip Prakash on ஆகஸ்ட் 6, 2008

கொஞ்சம் ஒல்லியா.., கொஞ்சமில்ல

ரொம்பவே.. ஒல்லியா, கிட்டத்தட்ட
ஓமக்குச்சி
நரசிம்மன் மாதிரி,
எலும்பும்
தோலுமா இருப்பானே,
நம்ம
நடேசன், அவன்பாட்டுக்கு
தனியா
பஸ்ஸ்டான்டுல
நின்னுகிட்டிருந்தானுங்க
.
பஸ்ஸ்டாண்ட்ல
எதுக்கு
நிப்பாங்க
? எல்லாம்
பஸ்ஸுக்காகத்தான்
!.நடேசனுக்கு
அப்படி
இப்படி, ஒரு
பொண்ணுக்குகாகவெல்லாம்
காத்திட்டுருக்கிற
ஆளில்லை,
அவனே
பாவம்,
ஒருத்தியும்
திரும்பி
பார்க்க
மாடேங்கிறான்னு
நொந்து
போய் இருக்கான், நீங்க
வேற
..

திடீர்ன்னு
ஒரு கார் அவன்
பக்கத்துல
வந்து நிக்குது,
அதுலேயிருந்து
ஒரு அழகான
பொண்ணு
அவன
பார்த்து
கைகாட்டி,
வண்டியில ஏறுடா நடேசுன்னு
கூப்பிடுது
. நம்ம நடேசனுக்கு
யாருடா
இது
. நம்மளை ஏன்
கூப்பிடுது
ன்னு ஒரு
சந்தேகம்
, இருந்தாலும் பொண்ணு,
அதுவும்
அழகா வேற
இருக்கு
, அப்புறம் எப்படி
போகாம
இருக்கிறதுன்னு, கிட்ட
போய்
பார்த்தா, “நிர்மலா“.

நிர்மலா
யாருடாங்கரீங்களா?
அதாங்க
, நடேசன் கூட காலேஜ்ல
படிச்சுதே
, அந்த பொண்ணுக்கு
கூட
காலேஜ்ல
ஏகப்பட்ட பேரு போட்டி
போட்டாங்கன்னு
நடேசன்
ஒருமாதிரி
விரக்த்தியா
சொல்லுவானே
,
அதே
நிர்மலா தான். ‘என்னடா
காலேஜ்ல
நம்மளை ஒரு குப்பையா
கூட
கண்டுக்காத பொண்ணு, இப்படி
காருல
வந்து
கூப்பிடுதே
ன்னு, நம்ம
பையனுக்கு
ஒரு கலக்கம்
இருந்தாலும்
, இப்பவாது அவ
பக்கம்
உக்கார
ஒரு சான்ஸ்
கிடைச்சுதேன்னு
டக்குன்னு
காருல
ஏறிட்டான்.

காரும்
போகுது, நம்ம
நடேசனுக்கு
என்ன பேசறதுன்னே
தெரியலை
. ‘ ஒரு கப் காபி
சாப்பிடுறயா
என்கூட
?’ன்னு நிர்மலா
கேட்டதும்
, நடேசனுக்கு,
காலேஜ்ல
அவ காபி சாப்பிடுற அதே
நேரத்துல
கான்டீன்ல
இன்னோரு
மூலையிலகூட
இவனுக்கு காபி
சாப்பிட
குடுத்த
வைக்காததெல்லாம்
நினவுக்கு
வர
, அத்தனை டிராபிக்கான டி.பி.
ரோட்டுல
பாரதிராஜா படத்துல
வர்ற
மாதிரி வெள்ளை டிரஸ்
தேவதையெல்லாம்
அப்படியே
லாலாலான்னு பாடிட்டு வர்ற
மாதிரி
தோனியிருக்குது, உடனே
தலைய
ஆட்டிட்டான்
. ‘இப்பப்போனா
கடையெல்லாம்
கூட்டமா
இருக்கும்
, என்னோட வீட்டுக்கு
போயிடலாம்
,
அங்கதான்
அமைதியா
இருக்கும்
ன்னு நிர்மலா
சொல்ல்ட்டு
நிர்மலா
பாட்டூக்கு
வண்டியா ஒட்டுது.
நம்ம
பையன் ஒரு புல் பாட்டில
கிங்பிஷர்
பக்கத்துலவச்சு
ஓப்பன்
பண்ணினாலே உளர
ஆரம்பிச்சுடுவான்

,
அவனைப்பார்த்து ஒரு அழகான்
பொண்ணு
, அதுவும் ஆட்டோகிராப்
படம்
மாதிரி, காளேஜ்ல சைட்
அடிச்ச
பொண்ணு, வீட்டுக்கு
போய்
தனியா காபி
சாப்பிடாலாம்ன்னு
கூப்பிட்டா,
எதோ
முதல் முதல்லா
சென்ட்ரல்
தியேட்டர் பக்கம்
போற
ஸ்கூல் பையன் மாதிரி ஒரே
படபடப்பா
தலையாட்டிருக்கான்.
அப்புறம்
அவன்
என்ன
செய்யுவான்
, பேச்சு
வந்தாத்தான
?

வீட்டுக்கும்
போயிட்டாங்க..’.
என்
பெட்ரூம்ல
உக்காந்துக்கலாமே
, அங்க தான்
.சி.யிருக்கு
சில்லுன்னு
இதமா
இருக்கும்
ன்னு நிர்மலா
சொல்ல
, இங்க நடேசனுக்கு,
உடம்புல
இருக்கிற அத்தனை
ஹார்மோன்
சமாச்சரங்களும்,
(
வியர்வையும் சேர்த்துதான்)
ஊத்தெடுக்க
ஆரம்பிச்சிருச்சு.
.சி.
ரூமுக்குள்ள
வேர்த்து
விறுவிறுத்து
நிக்கிறவனை
பார்த்துட்டு
நிர்மலாஏய்,
ஏன்டா
உனக்கு
இப்படி
வேர்க்குது, எதுக்கும்
சட்டைய
கழட்டிட்டு இப்படி
கட்டில்ல
உக்காரு, இதோ நான்
ஒரு
நிமிஷத்துல
வந்துர்ரன்ன்னு
சொல்லிட்டு
வெளிய போயிட்டா,
நடேசனுக்கு
அவன் பத்து வருஷம்
முன்னாடி
முருகன் தியேட்டர்ல
பார்த்த
டியுசன் டீச்சர்
இருந்து
போன வாரம் கனகதாராவுல
பார்த்த
தி டூ விமன்
வரைக்கும்
அந்த நேரத்துல ஏன்
ஞாபகம்
வருதுன்னு ஒரே
குழப்பம்
, அந்த
குழப்பத்துக்கு
நடுவாலயும்
நிர்மலா
சொன்ன மாதிரி சட்டைய
கழட்டி
வச்சுட்டு, (இந்த
இடத்துல
,
நடேசனுக்கு
பனியன்
போட்டுக்கிற
வழக்கம்
இல்லைங்கிற
முக்கியமான
விஷயத்தை
நாம்
மறந்துரக்கூடாது
) கட்டில்ல
உக்காந்திருக்கான்
.

இதோ
வர்றேன்னு போன நிர்மலா
அஞ்சு
நிமிஷமா வரலை, இங்க
நடேசனுக்கு
, காலேஜ் டூர்ல
நிர்மலா
போட்டுட்டு
வந்த டைட்
ஜீன்ஸும்
, லோகட் டாப்ஸும்,
திடீர்ன்னு
ஞாபகத்துக்கு
வந்து
பாடா படுத்துது.

பத்து
நிமிஷம் ஆச்சு, நிர்மலா
ரூமுகுள்ள
வர்றா…. அவ கூட
ரெண்டு
சின்ன குழந்தைக, உள்ள
வந்ததும்
அந்த குழந்தைக கிட்ட
சட்டையில்லாம
உரிச்ச கோழி
மாதிரி
உக்காந்திருக்கிற
நடேசன
காட்டி
பாத்துக்கங்க
கண்ணுகளா
, நீங்க ஒழுங்கா
ஹார்லிக்ஸ்
, காம்ப்ளான்,
எல்லாம்
குடிக்காட்டி
இப்படித்தான்
இந்த மாமா
மாதிரி
ஒல்லியாயிடுவீங்க
ன்னு
சொல்ல
சொல்ல
அய்யோ! நம்ம நடேசன் ஏங்க
திடீர்ர்ன்னு
நெஞ்ச
புடிச்சுட்டு
கட்டில்ல
சாயுறான்
, யாராவது ஒரு
ஹார்லிக்ஸ்
இல்லாட்டி
காம்ப்ளான்
கலந்துட்டு
வாங்களேன்

Tagged with: , ,